பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல் விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே பூமி ஒரு வீணை இதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லாம் அட சரிகமபதநிசரி.... (பூப்பூக்கும் ஓசை)
கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம் கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும் ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை... (இசை) பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம் தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம்